தமிழகமே எனது வீடு!" - வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் சுந்தர் சி பேட்டி
Apr 4, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published2 months ago
Duration3:00
Video ID3fYdgel3RXc
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views832
Likes16
Comments0
Engagement Rate1.92%
Likes per 100 views1.92
Comments per 1K views0.00
Video Tags
Description
மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக வேட்பாளர் சுந்தர் சி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து, அதிரடியான தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கினார்.
மனுத்தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களிடையே எழுச்சி தென்படுவதாகவும், இத்தொகுதியில் அதிமுகவின் வெற்றி 200 சதவீதம் உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை எனச் சாடினார்.
சுந்தர் சி மதுரைக்குச் சம்பந்தமில்லாதவர் என்ற கனிமொழியின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்த அவர், "கனிமொழி என்ன தூத்துக்குடிக்காரரா? அவரும் சென்னையைச் சேர்ந்தவர் தான்" என்று குறிப்பிட்டார். "தமிழகமே எனது வீடு, இனி மதுரை தான் எனது ஊர்" என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
மதுரையிலேயே வீடு எடுத்துத் தங்கி, மாதத்தில் 15 நாட்கள் மக்களுடன் நேரடியாக இருப்பேன் என உறுதி அளித்த சுந்தர் சி, மதுரையை லஞ்சமில்லாத முதன்மை நகரமாக மாற்றுவதே தனது லட்சியம் என்றார். நாளை முதல் தொகுதி முழுவதும் முழுவீச்சில் பிரச்சாரத்தைத் தொடங்க அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.