நெல்லை அத்தாளநல்லூரில் SEEDஅறக்கட்டளை சித்த மருத்துவமனை நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம்
Mar 5, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published3 months ago
Duration3:03
Video ID5UPa9Qv9JBY
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views37
Likes1
Comments0
Engagement Rate2.70%
Likes per 100 views2.70
Comments per 1K views0.00
Video Tags
Description
பாளையங்கோட்டை SEED அறக்கட்டளை சித்த மருத்துவமனை
ஆராதனா சில்க்ஸ் - செங்கோட்டை
குரு ஊறுகாய் - திருநெல்வேலி டவுண்
நாவல்டி டிரஸ்ஸஸ் - திருநெல்வேலி டவுண்ஆகியோர் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாமை திருநெல்வேலி அத்தாளநல்லூரில் உள்ள ஆடிட்டர் சுப்பிரமணியன் இல்லத்தில் வைத்து நடத்தியது.
குரு ஊறுகாய் உரிமையாளரும், திருநெல்வேலி சிறு வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளருமான திரு.R.A மூர்த்தி அவர்களும், SEED அறக்கட்டளையின் தலைமை அறங்காவலர் மருத்துவர் எஸ்.ஏ. பொன்னம்பலம் ஆகிய இருவரும் இணைந்து முகாமிற்கு தலைமை வகித்தனர் .
முகாமிற்கு SEED அறக்கட்டளை அறங்காவலர் மருத்துவர் ஜி.ராஜா சங்கர், திருநெல்வேலி டவுண் - ஐ சார்ந்த ஆடிட்டர் செல்வி S.சந்திர மீனா ACA ஆகிய இருவரும் முகாமிற்கு முன்னிலை வகித்தனர்..
SEED அறக்கட்டளையின் ஆடிட்டர் திரு. சுப்பிரமணியன்,
செங்கோட்டை ஆராதனா சில்க்ஸின் பங்குதாரர் திரு.G. சங்கரநாரயணன் ஆகிய இருவரும் இணைந்து முகாமை துவக்கி வைத்தனர்.
பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியின் 1987 Batch மருத்துவர்கள் யாவரும் ஒருங்கிணைந்து இயக்கி வருவது SEED அறக்கட்டளை சித்த மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் மரு.கு. சிவராமன் அவர்களை தலைமை ஆலோசராக கொண்டு 2015 ஆம் ஆண்டு முதல் இந்த SEED அறக்கட்டளை இயங்கி வருகின்றது.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரத்ததில் சர்க்கரை, யூரிக் ஆசிட் மற்றும் இரத்த கொதிப்பு பரிசோதனை பார்க்கப்பட்டது. அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில் சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, சிறுநீரக கல்லடைப்பு , மூலம், பெளத்திரம், கருப்பை கோளாறுகள் , நாட்பட்ட தோல் நோய்கள், வாதநோய் மூட்டுவலி, உடல் பருமன், தீராத தலைவலி, வயிற்றுப்புண், நரம்புத்தளர்ச்சி, ஹார்மோன் குறைபாடுகள், நாட்பட்ட சளி இருமல், ஆஸ்துமா சைனஸ் , தூக்கமின்மை போன்ற நோய்களுக்கு SEED அறக்கட்டளையின் மகளிர் நல மருத்துவரும் முதன்மை மருத்துவருமான ட வனிதா மற்றும் க்யூர் சித்தா கிளினிக் மற்றும் ஹோலிஸ்டிக் மெடிக்கல் சென்டரின் தலைமை மருத்துவருமா ன D.ராஜாசங்கர் ஆகிய இருவரது தலைமையில் 25 வருடங்கள் அனுபவமுள்ள சித்த மருத்துவர்களால் சிறந்த முறையில் சித்த மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டது.
பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் கிருஷ்ணவேணி, தர்சினி, திவ்யா, டேவிட் ஹட்லி, ஐஸ்வர்யா கீர்த்தனா ஆகியோரும்,
பயிற்சி மருத்துவர்கள் ஐயம் பெருமாள், கிருஷ்ணவேணி, சரண்யா, கீர்த்திகா, பத்மபிரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சச்சின் தலைமையிலான
பாளை சித்த மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் அடங்கிய SEED அறக்கட்டளை தன்னார்வக்குழுவினர் முகாம் சிறப்புற நடக்க உதவினர்
முகாமில் மாத்திரைகள், டானிக்குகள் தைலங்கள், கஷாயங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
முகாமில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சித்த மருத்துவத்தின் பாரம்பரிய நோய் கணிப்பு பரிசோதனையான மணிக்கடை நூல் பரிசோதனை மூலம் நோய்க் கணிப்பு செய்யப்பட்டது