திருவண்ணாமலை - ஸ்ரீலஸ்ரீ சாது சுவாமிகள் 13ம் ஆண்டு குருபூஜை விழா! உலக நன்மைக்காக சிறப்பு யாகம்!
Jan 28, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published4 months ago
Duration1:59
Video ID5fFaO4R-NaM
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views5
Likes0
Comments0
Engagement Rate0.00%
Likes per 100 views0.00
Comments per 1K views0.00
Video Tags
Description
திருவண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ சாது சுவாமிகள் 13 ஆம் ஆண்டு குருபூஜை விழா திருவண்ணாமலை கிரிவலப்பாதை எமலிங்கம் அருகில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடைபெற்றது.
இதையொட்டி உலக நன்மைக்காக மகா ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜய ஹோமமும், ஸ்ரீ ருத்ரம் மற்றும் ஸ்ரீ குரு கீதா ஹோமமும், 108 சங்கு அபிஷேகமும் நடைபெற்றது. கோவை தென்சேரிமலை அருள்மிகு மந்திர வேலாயுத சுவாமி திருக்கோயில் குருக்கள் ஏ. மந்திராஜலம் யாகத்தை நடத்தினார். காலை 6 மணிமுதல் 1 மணிவரை நடைபெற்றது பின் கலச நீர் ஊர்வலமாக எடுத்துச் சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர் சுவாமியின் சமாதிக்கு பால் தயிர் இளநீர் மற்றும் மஞ்சள் ஜவ்வாது ஆகிய வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு வல்லமலர்கள் பெற்று மகா தீபாரதனை நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் குருபூஜையில் கலந்துகொண்ட அனைவருக்கும் கோவை தொழிலதிபர் டி.டி.கே.முருகன் அன்னதானம் மற்றும் சுவாமி பிரசாதம் நாட்காட்டி போன்றவை வழங்கினார்.
தீர்க்க முடியாத நோய்கள் தீர்க்கவும் கர்ம வினைகளை தீர்ந்து உயர்நிலை அடையவும் வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கும் இந்த ஹோமம் பயனுள்ளதாக இருந்தது. திருமண தடைகள் குடும்ப சிக்கல்கள் வியாபாரம் மற்றும் தொழில்நோக்கங்கள் அடிக்கடி உண்டாகும் மன, உடல் பிரச்சனைகள் யாவும் நீங்கும் வகையில் நடைபெற்ற இந்த மகாஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றதோடு தரிசனமும் செய்தனர்.
இந்த விழாவில் திருவண்ணாமலை அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை தலைவர் மா.சின்ராஜ் செயலாளர் பி.அமரேன் பொருளாளர் வ.தனுசு அறக்கட்டளை உறுப்பினர்கள் தொழிலதிபர் ஆகாஷ் முத்துகிருஷ்ணன் வழக்கறிஞர் பழனிராஜ் பிடிஎன் தேவராஜ் உடுப்பி ராமச்சந்திர உபாத்யாயா தொழிலதிபர் கோவை ராமசாமி புதுச்சேரி நீதியரசர் முருகபூபதி துரிஞ்சாபுரம் என்.ரங்கநாதன் தி.மலை தொழிலதிபர்கள் மாசிலாமணி சி.எஸ்.துரை சிங்கப்பூர் ரமணா மற்றும் ரோகித் தாமோதரன் பாவலர் பா.குப்பன் அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை டி.டி.கே.முருகன் மற்றும் அவரது குடும்பத்தார் ஸ்ரீலஸ்ரீ சாது சுவாமிகள் சிஷ்யர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.