தமிழ் மொழி, கலாச்சாரத்தை ஒருபோதும் பாஜக, ஆர்எஸ்எஸ் தொட முடியாது!? ராகுல் காந்தி!

Apr 20, 2026Channel
AI Analysis
Data from YouTube Data API v3Updated Just now

Video Overview

Video Details

Published2 months ago
Duration5:10
Video ID7Exo_9m7NtM
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video

Performance Metrics

Views156
Likes3
Comments0
Engagement Rate1.92%
Likes per 100 views1.92
Comments per 1K views0.00

Description

தமிழ் மொழி, பாரம்பரியம், கலாச்சாரத்தை ஒருபோதும் பாஜக, ஆர்எஸ்எஸ் தொட முடியாது எனவும், ஊழல் காரணமாக அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவிடம் மோடி, அமித்ஷாவிடம் சரணடைந்து விட்டதால், அவர்களை கொண்டு தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாற்றை பாஜக அழிக்க துடிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் தமிழ்நாடு வருவது என்பது தமக்கு எப்போதும் மரியாதைமிக்கது என்றார், கடந்த சில ஆண்டுகளாக இயற்கையாகவே தமிழ்நாடு மக்களோடு நான் உறவை மேம்படுத்தியுள்ளேன் எனவும், எனது இதயத்தில் தமிழ் மக்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் தனி இடம் உள்ளதே என நான் எண்ணியது உண்டு என்றும், ஜம்மு, காஷ்மீர் மாநிலம் செல்லும் போது சொந்த வீடு போல உணர்வேன், ஜம்மு காஷ்மீர் மலைகளை பார்க்கும் போது எனது சொந்த இல்லத்திற்கு சென்றது போன்ற தனக்குள்ளே உணர்வு வருவதாகவும், நான் தமிழ்நாட்டில் பிறக்கவிட்டாலும், எனது குடும்பம் தமிழ்நாட்டில் இருந்து வராவிட்டாலும், தமிழ் மண்ணோடு நான் மிகவும் ஒன்றியுள்ளேன். ஆர்எஸ்எஸ், பாஜக தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் அழிக்க முயற்சிக்கிறார்களோ, அப்போது நான் தமிழனாகவே என்னை உணர்கிறேன். மொழியையும், கலாச்சாரத்தையும் அழிக்க எப்படி துணிச்சல் வந்தது என நான் எண்ணியது உண்டு என்றும், பாஜகவின் திட்டம் அரசியல் அமைப்பு சட்டத்தை சிதைப்பதாக இருந்தது. பிரதமர் மோடி ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என சொல்கிறாரே அப்போதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்தை சிதைக்கிறார். பாஜக, ஆர்எஸ்எஸ் என்ன செய்ய நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும், எனவும், மேலும் வலுப்படுத்த, தமிழ்நாட்டிற்கு 6 உத்தரவாதங்களை அளிப்பதாக கூறினார். பெண்களுக்கு மாதம் ரூ.2000, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000, கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 கல்வி உதவித்தொகை, குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய மாதம் ரூ.2500, அரசுப் பணியிடங்கள் 300 நாட்களில் நிரப்பப்படும் + உள்ளூர்வாசிகளுக்கு (குழு C & D) 60% இட ஒதுக்கீடு வழங்கப்படும், முதல் முறையாக சொத்து வாங்கும் பெண்களுக்கு இலவச சொத்துப் பதிவு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார். . மேலும் இந்த பூமியில் உள்ள எந்தவொரு சக்தியாலும் தமிழ்நாட்டையோ அல்லது அதன் மொழியையோ தொட முடியாது என்றும், பாஜக அதிமுகவை அழித்து விட்டது எனவும், அதிமுக என ஒன்று இல்லை எனவும், திமுக எப்படி இருந்ததோ அதுபோன்று அதிமுக ஒருகாலத்தில் இருந்தது எனவும், எப்போதோ அதிமுக அழிந்துவிட்டது எனவும், இப்போது உள்ளது பாஜக முகமுடியை அணிந்துள்ள அதிமுக என்றார். ஊழல் காரணமாக அதிமுக பாஜவிடம் மோடி, அமித்ஷாவிடம் சரணடைந்து விட்டதாகவும், நான் எங்கிருந்தாலும், தமிழ் மக்களின் மீது எனக்கு அலாதியான அன்பு உள்ளது என்றார். தமிழ் மொழி, கலாச்சாரத்தை பாதுகாத்திட ராகுல் காந்தி துணை நிற்பேன் என உறுதி அளித்தார்.

Related Videos

More videos from Shalini TV Updates