திருமங்கலம் ஏரிகள் அழிப்பு - ஆட்சியரிடம் முறையீடு
May 11, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published1 month ago
Duration3:00
Video ID7JwyoNDHuiU
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views180
Likes1
Comments0
Engagement Rate0.56%
Likes per 100 views0.56
Comments per 1K views0.00
Video Tags
Description
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விதிமீறி மண் அள்ளப்படுவதால் ஏரிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. விவசாயத்தைப் பாதுகாக்க அரசு உடனடியாக தலையிட வேண்டும் என பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திரளி மற்றும் மறவன்குளம் கிராம ஏரிகள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், சாலை அமைக்கும் பணிக்காக இந்த ஏரிகளில் சுமார் 40 அடி ஆழம் வரை சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் மக்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரைச் சந்தித்து முறையிட்டனர். திரளி ஏரியைத் தொடர்ந்து தற்போது மறவன்குளம் ஏரியும் முழுமையாகச் சேதமடைந்து வருவதால், விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர் திருமலைராஜ் (பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம்):
"விதிமுறைகளை மீறி அதிகளவில் மணல் எடுப்பதால் ஏரிகள் அழியும் நிலையில் உள்ளன. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியும் அவை முறையாகப் பின்பற்றப்படவில்லை. விவசாயத்தைப் பாதுகாக்கப் புதிய அரசு இந்த விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இது குறித்து சுரங்கத்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.