மதுரையில் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

Feb 4, 2026Channel
AI Analysis
Data from YouTube Data API v3Updated Just now
BARN Media
BARN Media

35.1K subscribers

View Channel

Video Overview

Video Details

Published4 months ago
Duration22:17
Video ID8vbbav5e6Hc
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video

Performance Metrics

Views64
Likes1
Comments0
Engagement Rate1.56%
Likes per 100 views1.56
Comments per 1K views0.00

Description

விஜயையும், TVKவையும் இன்னும் நான் அடிக்க ஆரம்பிக்கவில்லை, இனிதான் அடிப்பேன் என மதுரையில் அண்ணாமலை பேட்டி* *அமைச்சர்கள் இருவரின் தனிப்பட்ட ஈகோவால் மதுரை குப்பை நகராக மாறியுள்ளது* *திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆட்சியர் மன்னிப்பு கேட்பது அரசு கேட்டது போல தான், நீதிமன்றத்தில் அரசு வெட்கி தலைகுனிந்து உள்ளது* திமுக எம்பி கனிமொழி மனநல மருத்துவரை பார்க்க வேண்டும், மதுவிலக்கு விவகாரத்தில் அந்நியன் பட அம்பி போல் மாற்றி மாற்றி பேசுகிறார் மதுரை எம் பி சு வெங்கடேசன் திமுகவை பற்றி பேச மாட்டார், அவரது நிலை பாவமாக உள்ளது என மதுரையில் அண்ணாமலை பேட்டி* தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் அவர்கள் இல்லத்திருமண விழா சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் நடைப்பெற்றது‌. இந்நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திருமாறன் இல்லத்திற்கு இன்று நேரடியாக வருகை புரிந்து புதுமன தம்பதிகளை வாழ்த்தினார்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த. அண்ணாமலை விஜயையும், TVKவையும் இன்னும் நான் அடிக்க ஆரம்பிக்கவில்லை, இனிதான் அடிப்பேன், டப்பா இன்ஜின் என கூறிய விஜய்க்கு பதிலடி கொடுப்போம், அல்லு சில்லறை வச்சு பேசுறதுக்கு நாங்களும் அதே ஸ்டைலில் பதில் அளிப்போம் என்றார். எம்.எல்.ஏ பழனியாண்டி செய்தியாளர் மீது தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். கரூர் எஸ்பி கொடுத்தஅறிக்கை பொய், சட்டத்துக்கு விரோதமான குவாரி குறித்து ஒளிப்பதிவு செய்தவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க‌வேண்டும். இதில் நேரடியாக முதல்வர் தலையிட வேண்டும்‌ எம்எல்ஏ வாக இருந்தாலும் எப்ஐஆர் போடுங்க. தமிழகத்தில் அதிகமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதே திமுகவினரால் தான்.. சட்ட ஒழுங்கு அதளபாதளத்திற்கு சென்றுள்ளது என்றார். அரங்கத்தில் இருந்த தொண்டர்கள் கைதட்டுவதற்காக திமுக - த.வெ.க என narrative காக பேசிவருகிறார் விஜய். மக்களுக்கு தெரியும் ஆளும் கட்சி , எதிர்கட்சி எதுவென்று. விஜய் பேச்சு வாக்காளர்களை சிந்திக்கவைக்கும் பேச்சாக தெரியவில்லை எனக்கூறினார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆட்சியர் மன்னிப்பு கேட்பது அரசு கேட்டது போல தான். நீதிமன்றத்தில் அரசு வெட்கி லைகுனிந்து உள்ளது தமிழக மக்களுக்கு தெரிந்துவிட்டது வாக்கு அரசியலுக்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தை கொண்டுவந்துள்ளார்கள் என புரிந்துகொண்டார்கள். தமிழகம் காங்கிரஸ் விரும்பும் மாநிலமாக பல ஆண்டு காலம் இருந்தது. காமராஜர் உள்ளிட்ட அடையாள தலைவர்கள் இருந்தனர் தமிழகத்தில்.ஆனால் இன்றைய காங்கிரஸ் பிரவீன்சக்கரவர்த்தி பிரதிபலிக்கும் சக்கரவர்த்தியாக உள்ளார். காங்கிரஸ் சொந்த கட்சி தொண்டர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத கட்சியாக தான் உள்ளது எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் அதிகாரத்தை டெல்லியில் கொடுத்துவிட்டார்கள். 63 காங்கிரஸ், 40 , பின்னர் 25 சீட்டுக்கு வந்துருக்கு 10 ஆண்டுகளில் .ஆனாலும் காங்கிரஸ் பேசுபொருளாக உள்ளது. மோடியை பேசிவருவதால் என்றார் ஓபிஎஸ் NDA கூட்டணியில் வருவது குறித்த கேள்விக்கு? யாரும் தனித்துவிடப்படவில்லை, விரைவில் எல்லாம் உருவாகும் திமுக ஆட்சியை தூக்கி எறிவார்கள் எனக்கூறினார். அண்ணாமலையை விமர்சனம் செய்து அமைச்சர் சேகர் பாபு பேசியது குறித்த கேள்விக்கு? சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல; கோவில்களிலும் ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார். முதலமைச்சரின் வாகனத்தில் ஒட்டியுள்ள பல்லி போல சேகர்பாபு உள்ளார் என்றார். எம்பி கனிமொழி குறித்த கேள்விக்கு கனிமொழி மனநல மருத்துவரை பார்க்க வேண்டும். கனிமொழி அந்நியனா, அம்பியா, ரெமோவா பேசுகிறாரா என தெரியவில்லை என்றார். தூய்மையற்ற நகரங்களின் பட்டியலில் மதுரை இடம் பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு தமிழ்சங்கம் பார்த்த மதுரை வாரணாசிக்கு இணையான மதுரை. வாரணாசி எங்கு உள்ளது? மதுரையை குப்பை நகரமாக உள்ளது என்றார். சு.வெங்கடேசன் திமுக பற்றி மட்டும் பேசமாட்டார் மற்றதை பேசுவார், பாராளுமன்றத்தில் மோடியை பற்றி குறை பொய் சொல்வார், பாராளுமன்றத்தில் மக்கள் நலன் குறித்து என்றாவது பேசியிருக்கிறாரா பேசுவதெல்லாம் சைனா உள்ளிட்ட நாடுகள் குறித்து பேசுவார் என்றார். மேயர் இல்லாத மாநகராட்சி என்பதால் அமைச்சர்கள் தனிக்காட்டு ராஜாவாக உள்ளனர். இருவரின் தனிப்பட்ட ஈகோவால் மதுரை குப்பை நகராக மாறியுள்ளது எனக்கூறினார். தேர்தல் பொறுப்பாளர் என்பது அமைப்பு ஆத்மார்த்தமான வேலை அதை செய்ய நேரம் கொடுத்து செய்ய வேண்டும், நேரம் கொடுக்க முடியாத சூழலில் உள்ளேன் மற்றபடி அரசியல் வேலை பணி நேரம் இருக்கும் போது வருகிறேன். அரசியலை பொறுத்தவரை அரசியல் கேள்விக்கு பதில் அளிக்கிறேன். நான் அரசியலில் இருந்து பின்வாங்க போவதில்லை எனத் தெரிவித்தார். யாரை எங்க பயன்படுத்த வேண்டும் என கட்சிக்கு தெரியும். ஏற்கனவே கட்சியில் சொல்லியிருக்கேன் 2026 ல் திமுக ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கப்பட வேண்டும் என NDA தெளிவாக உள்ளோம் என்றார். அண்ணாமலை கோவையில் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு? கட்சி எல்லோருக்கும் ஒரு பணி கொடுக்கும் இந்த கட்சியை பொறுத்தவரை யார் எங்கு நிற்க வேண்டும் என்பதை கட்சி முடிவு செய்யும். அரசியல் வேலை தொடர்ந்து நடக்கும்.. அமைப்பு வேலை உரிய நேரத்தில் வரமுடியாது என்பதை கட்சியின் தலைமைக்கு சொல்லிட்டேன் எஸ் வி சேகர் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு எஸ்வி சேகர் டிராமா நடித்தார், முதலமைச்சருக்கு சிங்சாங்க அடிக்கிறார். காமெடிக்கு வேண்டும் என்பதால் காமெடி நாடக நடிகர் டிக்கெட்டுக்காக பேசுகிறார். ஒரு MLAவுக்காக பேசுகிறார் நாடக கூடாரம் போல சேகர் பேசுகிறார் நாடகம் நடிப்பவர் எஸ்வி சேகர் அரசியல் கருத்து கூறுவது வேடிக்கை என்றார்.

Related Videos

More videos from BARN Media