திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாதது அவமானம் - அமைச்சர் பீயூஷ் கோயல்
Feb 28, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published3 months ago
Duration3:00
Video IDCqScpW95Cy8
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeYouTube Short
Performance Metrics
Views804
Likes7
Comments0
Engagement Rate0.87%
Likes per 100 views0.87
Comments per 1K views0.00
Video Tags
Description
நாளை மதுரையில் நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடையை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அவருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், "திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்காதது தமிழக மக்களின் கலாச்சாரத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்" என திமுக அரசை கடுமையாகச் சாடினார். தமிழகத்தின் பாரம்பரியத்தையும், இறையாண்மையையும் திமுக கெடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா காலத்து பொற்கால ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எடப்பாடி பழனிசாமிதான் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு என்பது ஒரு குடும்ப விஷயம் போன்றது என்றும், அது குறித்த இறுதி முடிவு விரைவில் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, அது தனிப்பட்ட பழக்கவழக்கம் சார்ந்தது என சுருக்கமாகப் பதிலளித்த அமைச்சர், ஈரான் போர் குறித்த கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகமே பதிலளிக்கும் எனக் கூறினார்.