ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்த ஸ்லேட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!? - டி.ஆர்.ஏ. நிறுவனம்
Apr 29, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published2 months ago
Duration2:23
Video IDDT_A5_Q7uqs
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views76
Likes0
Comments1
Engagement Rate1.32%
Likes per 100 views0.00
Comments per 1K views13.16
Video Tags
Description
விரைவான கட்டுமானப் பணிகள், சிறந்த தரக் கட்டுப்பாடு மற்றும் பல மொழிகளில் உடனுக்குடன் தகவல்களைப் பகிரும் வசதியுடன், செயற்கை நுண்ணறிவு மூலம் கட்டுமானப் பணிகளை நிர்வகிக்கும் முதல் முயற்சி
சென்னை, ஏப்ரல் 28, 2026: வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும், புதுமைகளை புகுத்துவதிலும் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான சென்னையைச் சேர்ந்த டிஆர்ஏ, கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்லேட் டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனத்துடன் இணைந்து இன்று ஒரு முக்கிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இதன்படி, தங்களது கட்டுமானப் பணிகளில் 'ஸ்லேட் ஏஐ' என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது. இதன் மூலம், இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் ரியல் எஸ்டேட் நிறுவனம் என்ற பெருமையை டிஆர்ஏ பெறுகிறது.
கட்டுமானப் பணிகள் பெரிதாகவும் சிக்கலாகவும் மாறி வரும் நிலையில், பழைய முறைகளை மாற்றி ஏஐ தொழில்நுட்பம் மூலம் பணிகளைச் சுலபமாகச் செய்ய ஸ்லேட் டெக்னாலஜிஸ் நிறுவனம் உதவுகிறது. இதன் மூலம் பணிகளின் வேகம் அதிகரிக்கும் மற்றும் சரியான முடிவுகளை எடுக்க முடியும். மேலும், திட்டங்களை குறித்த நேரத்தில் முடிப்பதோடு, அதில் ஏற்படும் பிரச்சினைகளையும் வெகுவாக குறைக்க முடியும்.
இந்திய ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். திட்ட மேலாண்மை, தரப் பரிசோதனை, கட்டுமான தளக் கண்காணிப்பு, பொருட்கள் கொள்முதல், தொழிலாளர்களின் திறன், பாதுகாப்பு, தாமதங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கு உடனுக்குடன் முடிவெடுப்பது போன்ற முக்கியப் பணிகளில் டிஆர்ஏ நிறுவனம் இந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த உள்ளது. இது பணிகளின் தரத்தையும் திட்டத்தின் நேரத்தையும் இணைப்பதால், ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதை முன்கூட்டியே கண்டுபிடித்து, விரைவாகத் தீர்க்க முடியும்.
தற்போது சென்னையில் உள்ள டிஆர்ஏ நிறுவனத்தின் திட்டங்களில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சுமார் 33 லட்சம் சதுர அடி பரப்பளவிலான கட்டுமானப் பணிகளுக்கும், அங்கு வேலை செய்யும் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் உதவியாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சரியான நேரத்தில் தரமான வீடுகளை வழங்குவதில் தங்களது நற்பெயரை மேலும் வலுப்படுத்த டிஆர்ஏ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதில் மிக முக்கியமான ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், ஸ்லேட் ஏஐ பல மொழிகளில் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது. இந்தியாவில் பல மொழிகள் பேசும் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதால், அவர்கள் அனைவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவும்.
ரியல் எஸ்டேட் துறையிலேயே முதல்முறையாக நடைபெறும் இந்தக் கூட்டணி குறித்து டிஆர்ஏ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரஞ்சித் ரத்தோர் கூறுகையில், "எங்களைப் பொறுத்தவரை, புதிய கண்டுபிடிப்புகள் வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும். ஸ்லேட் நிறுவனத்துடனான இந்தக் கூட்டணியை, இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புதிய தொடக்கமாகவே (கன்ஸ்டரக்ஷன் 2.0) நான் பார்க்கிறேன். தொழில்நுட்பம், பல மொழிகளில் தொடர்புகொள்ளும் வசதி, முன்கூட்டியே கணிக்கும் திறன் மற்றும் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துதல் ஆகியவை ஒன்றிணைந்து, தரமான வீடுகளை குறித்த நேரத்தில் வழங்க இது உதவும். நாங்கள் வளர்ச்சி அடைந்து வரும் இந்த நேரத்தில், எதிர்காலத்திற்குத் தேவையான புதிய அமைப்புகளை உருவாக்குவது எங்களுக்கு எப்போதும் முக்கியமான ஒன்றாகும்" என்றார்.
இந்த கூட்டணி குறித்து ஸ்லேட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஏஐ பிரிவின் தலைவர் செந்தில் குமார் பேசுகையில், "கட்டுமானத் துறையில் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றம் நடந்து வருகிறது. இதில் உள்ள சிக்கலான பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க பழைய முறைகள் மட்டுமே போதாது. ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு பணிகளைச் செய்து, விரைவான முடிவுகளை எடுக்கவும், திட்டத்தை முன்கூட்டியே கணித்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பலன்களை வழங்கவும் டிஆர்ஏ நிறுவனத்துடன் இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று கூறினார்.டிஆர்ஏ நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில், இதுபோன்ற சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, நிறுவனத்தின் சீரான வளர்ச்சி, சிறந்த நிர்வாகம் மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற பணிகளைச் செய்யும் திறன் ஆகியவற்றின் மீதான நீண்டகாலக் கவனத்தைக் காட்டுகிறது.
மேலும், இந்தக் கூட்டணியானது ஸ்லேட் நிறுவனத்தின் இந்திய விரிவாக்கத்திலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இது இந்தியாவின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தேவையும் முக்கியத்துவமும் அதிகரித்து வருவதை தெளிவாகக் காட்டுகிறது.