திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மாணிக்கவாசகர் கோகழி அடியார் இல்லம் திறப்பு விழா!
Mar 31, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published3 months ago
Duration1:12
Video IDDYuC1XBX6Eg
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views37
Likes11
Comments0
Engagement Rate29.73%
Likes per 100 views29.73
Comments per 1K views0.00
Video Tags
Description
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மாணிக்கவாசகர் கோகழி அடியார் இல்லம் திறப்பு விழாவில் சிவ.தாமோதரனார் உள்ளிட்ட அடியார் பெருமக்கள் பங்கேற்றனர்.
மாணிக்கவாசகரை சிவபெருமான் திருவடி தீட்சை கொடுத்து ஆட்கொண்ட பின்னர் எதிர்கால மக்களுக்காக திருப்பெருந்துறை சிவபெருமான் திருக்கோயில் கட்டுவிக்கப்பட்டது.
அது போல இக்கால மக்களுக்கு வழிகாட்டும் பொருட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதை வேடியப்பனூரில் தம்பிரான் தோழர் கபிலனார், மாணிக்கவாசகர் கோகழி அடியார் இல்லத்தை கட்டியுள்ளார்.
இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதை யொட்டி நிருதிலிங்கம் முதல் கோகழி வரை சிலம்பாட்டம், சிவன் பார்வதி கூத்து, சிவனாரும் பூதகணங்களும் கூத்து, கொக்கனிக் கட்டை நடனம் ஆகியவற்றுடன் ஊர்வலம் நடைபெற்றது.
திருவாசக இன்னிசை சக்கரவர்த்தி சிவ.தாமோதரனார் தலைமை தாங்கினார். தர்ம ரக்ஷன சமிதி மாநில பொறுப்பாளர் நரேஷ் பாபு முன்னிலை வகித்தார்.
முடிவில் கோகழி அடியார் இல்லம் திறக்கப்பட்டது. மாலையில் இந்த பூமி சிவ நாடாக மாற வேண்டும் என்ற வழிபாட்டோடு சிவபுரம் சத்தியாம்மா நந்தி கொடியை ஏற்றி வைத்தார். மறை ஞானி அப்பரார் பிரபுராம் தமிழ் மறை ஓதி வழிபாட்டை நடத்தினார்