மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி - "இரட்டை இலை" சின்னத்தில் போட்டி
Apr 1, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published2 months ago
Duration3:00
Video IDFHT4G1ZUiIc
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeYouTube Short
Performance Metrics
Views3.3K
Likes8
Comments0
Engagement Rate0.24%
Likes per 100 views0.24
Comments per 1K views0.00
Video Tags
Description
திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி., தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார். இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்த அவர், செய்தியாளர்களிடம்
புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் முன்னிலையில் பேசிய சுந்தர் சி., அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையில் போட்டியிடுவதை பெருமையாகக் கருதுவதாகவும், இதற்கு வாய்ப்பளித்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
"மதுரை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கோட்டை. தூங்காநகரத்தின் பிரச்சினைகளை நன்கு அறிந்து வைத்துள்ளேன். எய்ம்ஸ் மருத்துவமனைப் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதே எனது நோக்கம்" எனத் தெரிவித்தார்.
தி.மு.க-வின் பலம் வாய்ந்த வேட்பாளர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "போட்டி எல்லா இடத்திலும் கடினமாகத்தான் இருக்கும்; அதற்காக ஒதுங்கிப் போக முடியாது. வெற்றிபெறவே போராடுவோம், நிச்சயம் ஜெயிப்போம்" எனத் தன்னம்பிக்கையுடன் பதிலளித்தார்.
வரும் 4-ஆம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ள சுந்தர் சி., இன்றைய தினமே கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துத் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.