திருவள்ளூர் அருகே இரு வேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்!?
Mar 25, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published2 months ago
Duration2:10
Video IDFhKgRf7dgh0
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views210
Likes1
Comments0
Engagement Rate0.48%
Likes per 100 views0.48
Comments per 1K views0.00
Video Tags
Description
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூர் அடுத்த காட்டுகூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அருள் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி ரூ. 4 லட்சம் ரூபாய் கொண்டு வந்தது தெரிய வந்தது. விசாரணையில் சுசீந்தர் என்பவர் தனியார் தொழிற்சாலையில் மேலாளராக இருப்பதாகவும் அவரது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக அவரது குடும்பத்தாருக்கு உதவித் தொகையாக கொடுப்பதற்காக ஊழியர்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு ஆவணங்கள் இல்லாததால் பணம் ரூ.4 லட்சத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் இடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் செலுத்தி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுயாறு அறிவுறுத்திதுடன் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார். அதேபோல் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் இருந்து கூல்ட்ரிங்க்ஸ் வாங்குவதற்காக திருவள்ளுவர் அடுத்த முத்துக்கொண்டாபுரம் என்ற பகுதியில் வேனில் வந்த பாலசுப்பிரமணி என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்ததால் அதனை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி உஷாராணி என்பவர் திருவள்ளூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தார். உரிய ஆவணங்கள் செலுத்தி பணத்தை திரும்ப பெறுமாறு அறிவுறுத்தியதோடு அதனை கருவூலத்திலும் ஒப்படைத்தார்.