மதுரை - காஞ்சி மகா பெரியவர் கோவிலில் உலக நன்மைக்காக 300-வது குருவார சிறப்பு பூஜை
May 15, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published1 month ago
Duration3:00
Video IDJMFdqmMJ7bE
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views2.2K
Likes8
Comments0
Engagement Rate0.36%
Likes per 100 views0.36
Comments per 1K views0.00
Video Tags
Description
மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவா கிருகத்தில், உலக நன்மைக்காகவும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் நடைபெற்ற 300-வது வார சிறப்பு பூஜை குறித்த கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம்.
மதுரை எஸ்.எஸ். காலனியில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவா கிருகத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் குருவார பூஜையும், மாதந்தோறும் அனுஷ வைபவமும் மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற 300-வது வார சிறப்பு பூஜையில் மகா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைகளுக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைத்து, வாழ்வில் முன்னேற வேண்டி கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
மதுரை அழகர் கோவில் அருகே உள்ள பொய்கை கரைப்பட்டியில் காஞ்சி மகா பெரியவருக்குத் தனிக் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதில் பக்தர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி மகா பெரியவரின் அருளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் இறுதியில் 'அனுஷத்தின் அனுகிரகம்' நிறுவனர் நெல்லை பாலு அவர்கள் மகா பெரியவரின் பெருமைகள் குறித்து உரையாற்றினார். மேலும், வரும் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஆண்டாள்புரம் வசுதாரா விஸ்வாஸ் கருத்தரங்கு கூடத்தில் ஜெயந்தி உற்சவம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.