கரூரில் பழனி பாதயாத்திரை பந்தல்கள் திமுக சார்பில் போடப்பட்டுள்ளதாக எங்கள் மீது வீண் பழி! துணை மேயர்
Mar 21, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published3 months ago
Duration3:37
Video IDLrXagiVpHOQ
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views80
Likes1
Comments0
Engagement Rate1.25%
Likes per 100 views1.25
Comments per 1K views0.00
Video Tags
Description
கரூரில் சுயேச்சை வேட்பாளர்கள், பழனி பாதயாத்திரை செல்பவர்கள் அமைத்துள்ள பந்தல்கள் திமுக சார்பில் போடப்பட்டுள்ளதாக எங்கள் மீது வீண் பழி சுமத்துகின்றனர் என திமுகவை சேர்ந்த துணை மேயர் பேட்டி.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூரில் அனுமதி இன்றி 100 இடங்களில் செட் அமைத்து பொதுமக்களை அடைப்பதற்காக மனிதப் பட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக முன்னால் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் பலர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து துணை மேயர் தாரணி சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
கரூரில் திமுக சார்பில் 9 இடங்களில் மட்டுமே தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள், பழனி மலை பாதயாத்திரை செல்பவர்கள் மற்றும் கோடை காலம் என்பதால் தண்ணீர் பந்தல் என பல்வேறு நபர்கள் செட் அமைத்துள்ளனர். தோல்வி பயத்தின் காரணமாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எங்கள் மீது வீண் பலியை சுமத்துகிறார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்தும் பிரச்சாரத்திற்கு போதிய மக்கள் வரவேற்பு இல்லை. ஒரு சில இடங்களில் அனுமதி இல்லாமல் பிரச்சாரம் நடத்துகிறார். கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி 5000 கோடி அளவிற்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளார். அதை பொறுக்க முடியாமல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசி வருவதாக தெரிவித்தார்.