தவெக தலைவர் விஜய் டபுள் இன்ஜின், டப்பா இஞ்சின் எனக் கூறியதற்கு வானதி சீனிவாசன் பதிலடி!
Feb 7, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published3 months ago
Duration7:00
Video IDMWDOreQfoBo
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views18
Likes0
Comments0
Engagement Rate0.00%
Likes per 100 views0.00
Comments per 1K views0.00
Video Tags
Description
திமுகவை எதிர்க்கும் கட்சிகள், தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் கட்சிகளை நாங்கள் வரவேற்கிறோம்....
மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்திற்கு முறையாக கொண்டு சேர்க்க டபுள் அல்ல ட்ரிபிள் என்ஜின் தேவைப்படுகிறது...
தவெக தலைவர் விஜய்கு வானதி ஸ்ரீநிவாசன் பதிலடி.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக சார்பில் சக்தி கேந்திரரா பொருப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது .இதில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் குன்னூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையை அணிவித்த கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பிரதமர் மோடி நீலகிரி மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழங்கி உள்ளார் ஆனால் திமுக அரசு அந்த மருத்துவமனையை சரியாக பராமரிக்காமல் மக்களுக்கு தகுந்த சேவையை அளிக்காமல் மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளது. திமுக அரசில் நடைபெறும் ஒரே வேலை லஞ்சமும் ஊழலும் தான் என்றார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளதாகவும் ஒவவொரு நாளும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து தமிழகம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறினார்.
தமிழக முதலமைச்சர் தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ஆனால் அவர் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், முதலமைச்சரால்தான் தமிழகம் சீரழிந்துள்ளது திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்களது கனவு என்றார்.
திமுகவை எதிர்க்கும் கட்சிகள், தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் கட்சிகளை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் தமிழைப் பற்றி கூறியதற்கு பதில் கூறிய கமலஹாசன் என்ன கூறினார் என அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியாது யாரோ எழுதிக் கொடுத்ததை அவர் பாராளுமன்றத்தில் வாசித்துள்ளார். தனது கட்சியை அறிவாலயத்தில் அடமானம் வைத்துவிட்டார் அவரை நம்பி பலபேர் கட்சியில் இணைந்து பல கோடி ரூபாய் இழந்தனர். அதை அனைத்தும் வீணாக்கி கட்சித் தொண்டர்களை நிற்கதியாய் நிறுத்தி துரோகம் செய்துவிட்டார் என்றார்.
திமுக அரசு ஏதாவது ஒரு வாக்குறுதி நிறைவேற்றி உள்ளதா சத்துணவு ஊழியர்கள் விடிய விடிய போராடிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும் பாஜகவில் அண்ணாமலையிடம் இடைவெளி ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு அப்படி ஏதுமில்லை நாங்கள் ஒற்றுமையாகதான் உள்ளோம் என்றார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேசிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற பாஜக சார்பில் தேசிய அளவிலான தலைவர்களும் மாநிலத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து வெற்றி பெற்று திமுகவை வீட்டிற்கு அனுப்பவோம்.
வவரலாற்றில் எந்த முறையும் இல்லாத வகையில் இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக அளவிலான எம்எல்ஏக்களை பாஜக சார்பில் சட்டமன்றத்திற்குள் அனுப்புவோம் என்றார்.
தவெக தலைவர் விஜய் டபுள் இன்ஜின் டப்பா இஞ்சின் எனக் கூறியதற்கு மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் கொண்டு சேர்க்க டபுள் அல்ல ட்ரிபிள் என்ஜின் தேவைப்படுகிறது என்றார் மேலும்
ஜனநாயகன் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு தயாரிப்பாளர் தான் பொறுப்பு நானும் தணிக்கை சான்று வழங்கும் குழுவில் இருந்திருக்கிறேன் அப்போது விஜயின் படத்தை பார்த்து அதற்கான தணிக்கைச் சான்று வழங்கப்பட்டது என்றார்.