ஆகாஷ் டெலிசன் மரண வழக்கு - முதலமைச்சரை சந்திக்க போராட்டக்காரர்கள் முடிவு
May 15, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published3 weeks ago
Duration3:00
Video IDSms-YuWgDe0
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views606
Likes6
Comments0
Engagement Rate0.99%
Likes per 100 views0.99
Comments per 1K views0.00
Video Tags
Description
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரண வழக்கில், தொடர்புடைய காவல்துறையினரை உடனடியாகக் கைது செய்யக் கோரி மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் டெலிசன், மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல்துறையினர் அவர் தவறி விழுந்ததாகக் கூறினாலும், இது திட்டமிட்ட கொலை என உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
உயிரிழந்து 68 நாட்களைக் கடந்தும், நீதி வேண்டி அவரது உடல் இன்னும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடாமல் 302-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் குகன், தீபன் மற்றும் சிறப்புப் படை காவலர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி சனநாயக இயக்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்டனர்.
"குற்றவாளிகளின் பெயர்களைச் சேர்த்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சிபிசிஐடி போலீசார் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்."
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.