SEED அறக்கட்டளை சித்த மருத்துவமனை சார்பில் சித்த மருத்துவ வர்ம சிகிச்சை பயிற்சி வகுப்பு

Apr 1, 2026Channel
AI Analysis
Data from YouTube Data API v3Updated Just now
BARN Media
BARN Media

35.1K subscribers

View Channel

Video Overview

Video Details

Published2 months ago
Duration3:38
Video ID_6yw7NJwt-s
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video

Performance Metrics

Views157
Likes7
Comments1
Engagement Rate5.10%
Likes per 100 views4.46
Comments per 1K views6.37

Description

SEED அறக்கட்டளை சித்த மருத்துவமனை சார்பில் சித்த மருத்துவ வர்ம சிகிச்சை பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு SEED அறக்கட்டளையின் தலைமை அறங்காவலர் மரு. எஸ்.ஏ. பொன்னம்பலம் அவர்கள் தலைமை தாங்கினார் SEED அறக்கட்டளை சித்த மருத்துவமனையின் மகளிர் நலம் தலைமை மருத்துவர்டாக்டர் வனிதா அவர்கள் முன்னிலை வகித்தார் SEED அறக்கட்டளை அறங்காவலர் மருத்துவர் G . ராஜாசங்கர் துவக்கி வைத்தார் சித்த மருத்துவர்கள் இணைந்து சித்தர் வணக்கம் பாடலை பாடி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தனர். பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியின் 1987 ஆம் ஆண்டு பட்டமளிப்பு மருத்துவர்கள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் அமைப்பாக SEED அறக்கட்டளை விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழக அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினர் மரு. கு. சிவராமன் அவர்கள் தலைமை ஆலோசகராக இருந்து, 2015 ஆம் ஆண்டு முதல் இந்த அறக்கட்டளை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து பல சித்த மருத்துவர்கள் கலந்து கொண்டதுடன், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சித்த வர்ம சிகிச்சை நிபுணர் மரு. க. இளவரசன் அவர்கள் வர்மம் சிகிச்சை குறித்த பயிற்சி வகுப்பை நடத்தினார். விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் அவசரகால வீக்கம், வலி, தாபிதம், சுளுக்கு, தசைநார் கிழிதல், புண், வர்ம புள்ளிகளில் அடி போன்றவற்றிற்கு சித்த வர்ம முறைகள் மூலம் உடனடி நிரந்தர நிவாரணத்தை தருவது எவ்வாறு என்ற செய்முறைப் பயிற்சி அளித்தார். இதனால் பெருமளவு மருத்துவ செலவுகள் குறைந்து, உழைப்பு நாட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முதியவர்களுக்கு ஏற்படும் அவசர நிலைகளான மயக்கம், கழுத்து தோள்பட்டை , கால், முழங்கால் வலிகளுக்கும் அவசரகால வர்ம புள்ளிகள் இயக்கும் முறைகள் அடங்கல் முறைகள் கற்பிக்கப்பட்டது. வர்ம முறைகளை நன்கு பயன்படுத்தி மருத்துவர்கள் சித்த வர்ம முறைப் பயிற்சியை ஆவணப்படுத்தி நம் தமிழ் தாயின் செல்வத்தை உலகிற்கு நாமே கொடையாக வழங்க வேண்டும்; இது ஒரு மிக எளிமையான வெளிப்புற சிகிச்சை என்பதால் மாற்று மருத்துவ முறைகளில் இந்த பிரச்சனைகளுக்கு உள் மருந்துகள் எடுத்துக் கொண்ட போதிலும் இந்த வர்ம சிகிச்சையையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம் எனவும் மரு.இளவரசன் தெரிவித்தார் . இந்த வகுப்பு சித்த மருத்துவத்தில் வர்ம சிகிச்சை குறித்த அறிவை மேம்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது. நவம்பர் 22',2025அன்று டெல்லியில் இருந்து திருச்சிக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண் பயணி திடீரென மயச்கமடைந்தார். விமானத்தில் பயணம் செய்த சித்த மருத்துவர்கள் மரு.இளவரசன் மற்றும் மரு.கெளதம் ஆகியோர் உடனடியாக கெளளி அடங்கல் மற்றும் செவிக்குற்றி போன்ற வர்ம புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து அந்த பெண்ணை மயக்கத்தில் இருந்து மீட்டனர். இவர்களின் இந்த துரித பாரம்பரிய உடனடி நிவாரணம் தரும் மருத்துவ சிகிச்சை முறைக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளது. பொது மக்களின் மத்தியிலும் இச்செய்தி வைரலாகி மருத்துவர் இளவரசன் மற்றும் கெளதம் ஆகியோருக்கு பாராட்டுதல்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது. சித்த மருத்துவத்தின் தனித்துவமான இந்த வர்ம சிகிச்சை அவசர‌ காலங்களில் உயிர் காக்கும் சிகிச்சையாக செயல்பட முடியும் என்பது இந்த நிகழ்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. SEED சித்த மருத்துவமனை வளாகத்தில் முதியவர்கள் மற்றும் விளையாட்டுக் காயங்களுக்கு சித்த வர்ம சிறப்பு வெளி நோயர் பகுதி தொடங்கப்பட்டுள்ளது.

Related Videos

More videos from BARN Media