மதுரையில் மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான பணிகள் தீவிரம்
Feb 28, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published3 months ago
Duration3:00
Video ID_AXLWRFtlQ8
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeYouTube Short
Performance Metrics
Views572
Likes7
Comments0
Engagement Rate1.22%
Likes per 100 views1.22
Comments per 1K views0.00
Video Tags
Description
தமிழகத்திற்கு நாளை வருகை தரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மாலை 3 மணி அளவில் மதுரை வந்தடைகிறார். மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் அவர், தமிழகம் - கேரளாவை இணைக்கும் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, மதுரை விமான நிலைய விரிவாக்கத்தின் முக்கியப் பகுதியான புதிய வான் கட்டுப்பாட்டு அறை கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர், புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
மாலை வேளையில், மதுரை மண்டேலா நகரில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். இந்த என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் வருகையையொட்டி, மதுரையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரச் சோதனை நடைபெற்று வருகிறது. விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மதுரையே தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.