தி.மலை - மத்திய அரசின் சாதனைகளை விளக்கி நாளை நமதே! தமிழ்நாடும் நமதே! தெருமுனை பிரச்சார கூட்டம்!
Feb 28, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published3 months ago
Duration3:40
Video ID_aApI2fDlxU
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views14
Likes1
Comments0
Engagement Rate7.14%
Likes per 100 views7.14
Comments per 1K views0.00
Video Tags
Description
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில்
4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும்
பாஜக கூட்டணி வேட்பாளர்கள்
வெற்றிபெற செய்ய வேண்டும்
மாவட்ட தலைவர் கே.ரமேஷ் பேச்சு
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற செய்ய வேண்டும் என மாவட்ட தலைவர் கே.ரமேஷ் கூறினார்.
திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட கிரிவல பாதை குபேரலிங்கம் அருகில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி சக்திகேந்திரா சார்பில் நாளை நமதே தமிழ்நாடும் நமதே தெருமுனை பிரச்சார கூட்டம் சக்திகேந்திரா பொறுப்பாளரும் சட்டமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான ஜெ.கே.ஆர்.கருணாகரன் ஏற்பாட்டின்பேரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பாஜக தெற்கு மாவட்ட தலைவர் கே.ரமேஷ் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.ஜீவானந்தம் அமமுக மாவட்ட செயலாளர் பரந்தாமன் அதிமுக ஒன்றிய செயலாளர் சரவணன் ஐஜேகே தொகுதி பொறுப்பாளர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் கே.ரமேஷ் சிறப்புரையாற்றுகையில்
தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்த சக்திகேந்திரா வழியாக பிரமாண்ட மக்கள் சந்திப்பு திட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை நேரடியாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும் கட்சியின் கொள்கைகளையும் சாதனைகளையும் வீடு வீடாக விளக்கவும் தேர்தல் களத்தில் பூத் அளவிலான கட்டமைப்பை வலுப்படுத்தவும் நாளை நமதே தமிழ்நாடும் நமதே என்ற முழக்கத்துடன் சக்திகேந்திரா தெருமுனை பிரச்சாரத்தில் பாஜக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியில தீவிரமாக ஈடுபடவேண்டும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் செங்கம் கலசபாக்கம் ஆகிய 4 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தோல்வியடைய செய்ய வேண்டும் எனவே இன்றுமுதல் மாநகராட்சி ஊராட்சி ஒன்றியம் பேரூராட்சி பகுதிகளில் வீடுவீடாக சென்று மத்திய அரசின் சாதனைகளையும் அதிமுக அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருமுனை பிரச்சாரம் மூலம் வீடு வீடாக சென்று துண்டுபிரசுரங்களை வழங்கி பாஜக அதிமுக அமமுக ஐஜேகே தமாகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வெற்றி இலக்கை நோக்கி தேர்தல் களப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்தகூட்டத்தில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் டி.ஜெய்நாத் அதிமுக மாவட்ட துணை செயலாளர் ஆடையூர் முனுசாமி அடிஅண்ணாமலை அதிமுக கிளை செயலாளர் கோசாலை ஜெ.வேலு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் தொகுதி இணை அமைப்பாளர் ஜெ.கே.ஆர்.கருணாகரன் செய்திருந்தார். முடிவில் பாஜக ஒன்றிய துணை செயலாளர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.