மத்திய அரசைக் கண்டித்து விருதுநகரில் தொழிற்சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
May 12, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published2 months ago
Duration2:18
Video IDcLKtUE8fmu0
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views1.3K
Likes4
Comments0
Engagement Rate0.30%
Likes per 100 views0.30
Comments per 1K views0.00
Video Tags
Description
மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, நாடு முழுவதும் போராட்டக் குரல்கள் வலுத்து வருகின்றன. டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் அறவழியில் போராடும் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளைக் கண்டித்து, விருதுநகரில் இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பாக திரண்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், காவல்துறை மூலம் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் போக்கை கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் மாடசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் மகாலட்சுமி மற்றும் செயலாளர் தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பெரம்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களைச் சாடி கண்டன உரையாற்றினார்.
இந்த எழுச்சி மிகு போராட்டத்தில் தொ.மு.ச மண்டல பொதுச் செயலாளர் ராஜா செல்வம், ஏஐடியுசி பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.