திருவண்ணாமலை - தற்கொலை எண்ணத்தில் வந்தவர் மக்களின் பசியாற்றும் அற்புதம்!தினம் 500 பேருக்கு அன்னதானம்
Jan 29, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published4 months ago
Duration15:26
Video IDfQ0Xcxt9lEk
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views71
Likes8
Comments2
Engagement Rate14.08%
Likes per 100 views11.27
Comments per 1K views28.17
Video Tags
Description
இலவசமாக தியானம் கற்றுக் கொடுப்பதன் மூலம் தினமும் 500 பேருக்கு அன்னதானத்தை வெட்டவெளி இருப்பிடம் அறக்கட்டளை வழங்கி வருவதாக வெட்டவெளி குருநாதர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கான தனது அரும்பணி குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
தஞ்சாவூர் கல்லணை காவிரிக்கரையில் இயற்கையாகவே தியான சக்தி கிடைத்த வெட்டவெளி குரு 15 ஆண்டுகளாக இமாச்சல், மேற்கு தொடர்ச்சி மலை, கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளில் தியானத்தின் மகிமையை பரப்பியவர். இவர் திருவண்ணாமலை விசிறி சாமியார் ஆசிரமம் அருகில் மணக்குள விநாயகர் தெருவில் வெட்டவெளி இருப்பிடம் அறக்கட்டளை ஏற்படுத்தி தினமும் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார்.
இந்த மதிய உணவு திட்டத்தில் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. குழம்பு, அப்பளம், பொறியல், கூட்டு என 11 வகை பொருட்களுடன் சாதம் பரிமாறப்படுகிறது. இதுகுறித்து வெட்டவெளி குரு, செய்தியாளரிடம் கூறியதாவது, இங்கு வாரத்தில் 7 நாட்களும் ஒரே மாதிரியாக இல்லாமல் விதவிதமாக உணவு வழங்கப்படுகிறது. இங்கு வருபவர்கள் பசியாறுவதோடு மட்டுமின்றி மன நிம்மதியோடு செல்கின்றனர்.
இதன் அருகிலேயே இலவச தியான வகுப்பை நடத்தி வருகிறேன். வீடு தோறும் தவம் என்பதுதான் எங்களது குறிக்கோள். 40 வயதிலிருந்து 80 வயதுக்கு உட்பட்டவர்கள் எனது மாணவர்களாக உள்ளனர். இவர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு தரும் நிதியைக் கொண்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தற்கொலை எண்ணத்தில் திருவண்ணாமலைக்கு வந்தேன். மலையை சுற்றினேன். நம்பிக்கை வந்தது. இனம் புரியாத ஈர்ப்பு கிடைத்தது. இதனால் தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனநிலைக்கு மாறினேன். இதன் காரணமாக திருவண்ணாமலையில் இலவச தியான வகுப்பு ஆரம்பித்து அதன் மூலம் மக்களின் பசியை ஆற்றி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த அறக்கட்டளை வழங்கும் அன்னதானம் ஏழை - எளிய மக்கள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் வரப்பிரசாதமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது