விருதுநகர் - மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் மனுக்களைப் பெற்றுக்கொண்டார்
May 12, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published1 month ago
Duration2:56
Video IDh2Od-QD5geM
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views1.3K
Likes1
Comments0
Engagement Rate0.08%
Likes per 100 views0.08
Comments per 1K views0.00
Video Tags
Description
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பெற்றுக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் பின்வரும் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர்:
இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல்.
புதிய குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு.
விபத்து நிவாரணம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள்.
முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் திருமண நிதியுதவி.
குறிப்பாக, ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அமருமிடத்திற்கே நேரடியாகச் சென்ற மாவட்ட ஆட்சியர், அவர்களிடம் கனிவுடன் பேசி கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் அந்தந்தத் துறை சார்ந்த அலுவலர்களிடம் ஒப்படைத்த ஆட்சியர், அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஆனந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. வீ.கேசவதாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி. பிர்தௌஸ் பாத்திமா உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.