கரூர் தொகுதியில் வாக்காளர்களை அடைத்து வைக்க 100 பட்டிகள் தயார்!? விஜயபாஸ்கர் ஆட்சியரிடம் புகார் மனு

Mar 21, 2026Channel
AI Analysis
Data from YouTube Data API v3Updated Just now

Video Overview

Video Details

Published2 months ago
Duration11:05
Video IDiw3VCj7ksVg
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video

Performance Metrics

Views122
Likes2
Comments0
Engagement Rate1.64%
Likes per 100 views1.64
Comments per 1K views0.00

Description

கரூர் தொகுதியில் வாக்காளர்களை அடைத்து வைக்க அனுமதியின்றி 100 பட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகைப்பட ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். கரூரில், சுமார் 100 இடங்களில் திமுக சார்பில் ஆடு, மாடுகளை அடைப்பது போல மனிதர்களை அடைப்பதற்கு பட்டிகள் தயார் செய்துள்ளனர். கரூர் தொகுதியில் 48 இடங்களில் போடப்பட்டுள்ள பட்டிகளின் புகைப்பட ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து உள்ளோம். பொதுமக்களிடம் போட்டோ, ஆதார் கார்டு வாங்கி அவர்களை உள்ளே உட்கார வைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட கவனிப்புகள் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் திமுகவின் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர். அனைத்து அதிகாரிகளையும் மாற்றம் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளுக்கு மட்டும் தனி சட்டம் உள்ளது. குறிப்பாக கரூர் தொகுதிக்கு மட்டும் சிறப்பு சட்டம் உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து பொதுமக்களுக்கு பிரைன் வாஸ் செய்து ஓட்டு வாங்கி வெற்றி பெற நினைக்கின்றனர். ஆர்.கே.நகர், ஈரோடு ஃபார்முலா போல கரூரிலும் தேர்தலை சந்திக்க உள்ளனர். இந்த மாதிரி அமைக்கப்பட்டுள்ள பட்டிகளுக்கு எந்தவித அனுமதியும் வாங்குவதில்லை. கோவில் இனாம் நிலங்களில் செட் போட்டுள்ளனர். ஆனால், கோவில் இனாம் நிலங்களில் குடியிருக்கும் அப்பாவி பொதுமக்களை விரட்டியடிக்கின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் முறையாக செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Related Videos

More videos from Shalini TV Updates