SEEDஅறக்கட்டளை சித்த மருத்துவமனை நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம்
Feb 23, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published4 months ago
Duration2:05
Video IDp7TcJKkzKbc
Languageta
CategoryTravel & Events
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views54
Likes1
Comments0
Engagement Rate1.85%
Likes per 100 views1.85
Comments per 1K views0.00
Video Tags
Description
SEED அறக்கட்டளை சித்த மருத்துவமனை ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமையன்று இலவச சித்த மருத்துவ முகாமை 2017 ஆண்டு ஜூன் மாதம் முதல் நடத்தி வருகின்றது. இந்த மாதம் பிப்ரவரி மாதம் 21
-ஆம் தேதி சனிக்கிழமையன்று SEED அறக்கட்டளை சித்த மருத்துவமனை வளாகத்தில் வைத்து முகாமை நடத்தியது.
SEED அறக்கட்டளை தலைமை அறங்காவலர் மரு.எஸ்.ஏ.பொன்னம்பலம் அவர்கள் முகாமை துவக்கி வைத்தார். SEED அறக்கட்டளை அறங்காவலர் மருத்துவர். ஜி.ராஜா சங்கர் முகாமிற்கு தலைமை வகித்தார்.
பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியின் 1987 Batch மருத்துவர்கள் யாவரும் ஒருங்கிணைந்து இயக்கி வருவது SEED அறக்கட்டளை சித்த மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் மரு.கு. சிவராமன் அவர்களை தலைமை ஆலோசராக கொண்டு 2015 ஆம் ஆண்டு முதல் இந்த SEED அறக்கட்டளை இயங்கி வருகின்றது.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரத்ததில் சர்க்கரை, யூரிக் அசிட் மற்றும். இரத்த கொதி.ப்பு பரிசோதனை பார்க்கப்பட்டது. அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில் சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, சிறுநீரக கல்லடைப்பு , மூலம், பெளத்திரம், கருப்பை கோளாறுகள் , நாட்பட்ட தோல் நோய்கள், வாதநோய் மூட்டுவலி, உடல் பருமன், தீராத தலைவலி, வயிற்றுப்புண், நரம்புத்தளர்ச்சி, ஹார்மோன் குறைபாடுகள், நாட்பட்ட சளி இருமல், ஆஸ்துமா சைனஸ் , தூக்கமின்மை போன்ற நோய்ககளுக்கு
25 வருடங்கள் அனுபவமுள்ள சித்த மருத்துவர்களால் சிறந்த முறையில் சித்த மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டது.
முகாமில் மாத்திரைகள், டானிக்குகள் தைலங்கள், கஷாயங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு வாதுமை இரணகள்ளி, நரிவெங்காயம் மற்றும் தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமில் கலந்து கொண்டவர்களில் தேவைப்பட் போருக்கு ECG பரிசோதனை அருணா கார்டியாக் கேர் மருத்துவனை உதவியுடன் செய்யப்பட்டது
ஹெல்ட்கிட்ஸ் அறக்கட்டளையும் கலந்து கொண்டு முகாம் சிறப்புற நடத்த உதவியது.
முகாமில் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு முகாம் சிறப்புற நடக்க உதவினர்.