படிப்பு, மார்க் குறைவாக இருந்தாலும் பண்பு குறையாமல் பிள்ளைகளை பெற்றோர்கள் பார்த்துக் கொள்ளவேண்டும்!
Feb 21, 2026•Channel
AI Analysis
Data from YouTube Data API v3•Updated Just now
Video Overview
Video Details
Published3 months ago
Duration5:41
Video IDpg1NH0qkeRY
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video
Performance Metrics
Views291
Likes0
Comments0
Engagement Rate0.00%
Likes per 100 views0.00
Comments per 1K views0.00
Video Tags
Description
படிப்பு, மார்க் குறைவாக இருந்தாலும்
பண்பு குறையாமல் தங்களது பிள்ளைகளை
பெற்றோர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்
பள்ளி ஆண்டு விழாவில்
தமிழ் எழுத்தாளர் மா.இராமலிங்கம் பேச்சு
திருவண்ணாமலை பிப்.21- திருவண்ணாமலை எஸ்என்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 26ஆம் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாப்பட்டது. இந்த விழாவையொட்டி கலைநிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் தமிழ் எழுத்தாளர் மா.இராமலிங்கம் வழங்கினார்.
திருவண்ணாமலை அருகே உள்ள குண்ணுமுறிஞ்சி கிராமத்தில் கிராமப்புற மாணவர்களுக்காக எஸ்என்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 26ஆம் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு தலைவர் கே.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கௌரவச் செயலாளர் ஆர்.காளிதாஸ் செயலாளர் பி.பட்டுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்க பள்ளியின் தாளாளர் பேராசிரியர கே.அண்ணாமலை அனைவரையும் வரவேற்றார். முதல்வர் பேராசிரியர் எஸ்.செந்தில்குமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) இரா.ஆ.பரிமளா வட்டார கல்வி அலுவலர் பி.தில்லைநாயகி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளரும் தமிழ் எழுத்தாளருமான நகைச்சுவை நாவலர் மா.இராமலிங்கம் தேசிய அளவில் பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கியதோடு பள்ளியில் பணியாற்றும் இருபால் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி பள்ளியின் கல்விதரம் குறித்து வெகுவாக பாராட்டிய அவர் சிறப்புரையாற்றுகையில்
ஒரு கல்வித்துறையே இந்த விழாவுக்கு வந்துள்ளது. இந்த பள்ளி மாவட்டத்திலேயே கல்வித்திறனளில் முதன்மை பெற்று சிறந்து விளங்குகிறது. பெண் பிள்ளைகள் இருந்தால் அந்த குடும்பம் சந்தோஷப்படவேண்டும் பெண் பிள்ளைகள்தான் இன்றைக்கு பொறுப்பாக உள்ளனர். தமிழகத்தில் 54 சதவிதம் பெண்கள் இன்றைக்கு வேலையில் உள்ளனர். அம்மாவையும் அப்பாவையும் நேசித்தால் அந்த பிள்ளை நல்ல நிலைக்கு உயரும் அன்பால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் தாய்மார்களுக்கு நெருக்கடி உள்ளது.
எல்லா சீரியல்களிலும் எதிர்மறை சிந்தனைகள்தான் வருகிறது. மாயவலையில் உள்ளது சீரியல்கள் படிப்பு குறைவாக இருந்தாலும் மார்க் குறைவாக இருந்தாலும் பண்பு குறையாமல் தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள இந்த எஸ்என்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேச பக்தர்களையும் ராணுவ வீரர்களையும் உருவாக்கியதோடு ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளையும் உருவாக்கியுள்ளது. இந்த பள்ளியில் 50வது பொன்விழா கொண்டாட வாழ்த்துகிறேன் என்றார்.
இந்த விழாவையொட்டி மாணவ மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பள்ளியின் துணை தலைவர் டி.குப்புசாமி இணை செயலாளர் கே.ராஜேந்திரன் மற்றும் கல்வி மற்றும் போக்குவரத்து இயக்குநர்கள் பள்ளிவளாக பராமரிப்பு இயக்குநர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில பொருளாளர் ஆர்.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.