உலகிலேயே பேசப்படும் இடமாக அமைய உள்ள பிரம்மாண்டமான அன்னதான கூடம் கட்டப்படும்! - வெட்டவெளி குருநாதர்

Jan 30, 2026Channel
AI Analysis
Data from YouTube Data API v3Updated Just now

Video Overview

Video Details

Published4 months ago
Duration13:03
Video IDsbA7CkTGsS4
Languageta
CategoryNews & Politics
PrivacyPublic
Made for KidsNo
Video TypeRegular Video

Performance Metrics

Views229
Likes45
Comments4
Engagement Rate21.40%
Likes per 100 views19.65
Comments per 1K views17.47

Description

திருவண்ணாமலை ஜன.31- திருவண்ணாமலை விசிறி சாமியார் ஆசிரமம் அருகில் வெட்ட வெளியில் இலவச தியான மண்டபம் மற்றும் தினமும் 500 பேருக்கு உணவு வழங்கும் அன்னதான கூடம் ஆகியவற்றை நடத்தி வருபவர் வெட்டவெளி குரு. வெட்ட வெளி இருப்பிடம் அறக்கட்டளை மூலம் இப்பணிகளை செய்து வரும் அவர் தனது மாணவர்கள் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார். தியான மாணவர்கள் மத்தியில் வெட்டவெளி குருநாதர் உரையாற்றுகையில், திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் முழு நேரமும் உணவு வழங்கக்கூடிய பிரம்மாண்டமான அன்னதான கூடம் கட்டப்படவுள்ளது. உலகிலேயே இது பேசப்படும் இடமாக அமையும். அன்னதானத்திற்கு பயன்படுத்தப்படும் பொன்னி அரிசி விவசாய நிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. பாமாயில் போன்ற எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தப்படுவதில்லை அதற்கு பதில் வேர்க்கடலையை அரைத்து கடலை எண்ணெய் தயாரிக்கிறோம். மசாலா பொடிகளை நாங்களே தயாரித்துக் கொள்கிறோம். இங்கே வெரைட்டி ரைஸ், உப்புமா போன்றவைகள் வழங்கப்படுவதில்லை. அதற்கு பதில் கல்யாண வீடு விருந்து போல் வடை, பாயாசத்துடன் உணவு வழங்கப்படுகிறது. பணம் குறிக்கோள் இல்லை. உணவு மங்களகரமாக இருக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோள். விருந்தில் தவறு நடக்கலாம், அன்னதானத்தில் தவறு நடக்கக்கூடாது. இதனால் அன்னதானத்திற்கு யாராவது பொருட்களை வழங்கினால் அதை தரம் பார்த்து தான் வாங்குவோம். ஹோட்டல்கள் மற்ற ஆசிரமங்களில் இல்லாத அளவு இங்கு சுத்தமாகவும், தரமாகவும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் உணவு உண்பவர்களுக்கு உடல் உபாதைகள் ஏதும் வருவதில்லை. உணவு பாதுகாப்பு அதிகாரிகளே வந்து சோதித்துக் கொள்ளலாம். இயல்பு, யதார்த்தம் என்பது எங்களது கொள்கை. வணங்குவது என்பதை விட உணர்வது என்பது உயர்ந்தது. இவ்வாறு அவர் பேசினார். இந்த வெட்டவெளி அறக்கட்டளை வழங்கும் அன்னதானம் ஏழைஎளிய மக்கள் தொழிலாளர்கள் நடுத்தர மக்கள் கல்லூரி மாணவ மாணவிகள் வயது முதிர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் வரப்பிரசாதமாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. ஒரு தாய் தன் மகன் மகளுக்கு எப்படி தூய்மையான தாய்ப்பால் கொடுக்கிறாரோ அதுபோல் அன்னதானமும் இருக்க வேண்டும் என வெட்ட வெளி சுவாமிகள் கூறினார்

Related Videos

More videos from Shalini TV Updates